40 உறவினர்கள் வயிற்றில் அடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த நபர் - நடுரோட்டில் கண்ணீருடன் கதறல்

x

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே வியாபாரம் தொடங்குவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுக்காலங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகராஜ் என்பவர், காய்கறிகளை டன் கணக்கில் பெற்று, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர், தமது உறவினர்களிடம், லட்சக்கணக்கில் பணம் பெற்று, 5 கோடி வரை சுருட்டியதாக கூறப்படுகிறது. வியாபாரம் செய்வதற்காக பணம் பெற்ற முருகராஜ், வியாபாரம் தொடங்காமல், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பணம் தந்தவர்கள் திருப்பி கேட்ட போது, தருகிறேன் என கூறி தட்டி கழித்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. பணத்தை கொடுத்து ஏமாந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு எண்ணிற்கு புகார் அளித்து இருப்பதாகவும் தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளிடமும் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்