"மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1500.." - பிரியங்கா காந்தி வாக்குறுதி

x

மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜபல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.அப்போது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும், எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்றும் கூறினார். 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும், 200 யூனிட் வரையிலான மின்சார கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், விவசாயிகள் பெற்ற வேளாண் கடன் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்