அலங்கார பொருளில் வந்த ரூ. 5 கோடி அதி பயங்கர போதை... - ஹாயாக வந்த டெலிவரி பாயை அமுக்கிய அதிகாரிகள்

x

கோஸ்டாரிக்கா நாட்டிலிருந்து மும்பை விமான நிலைய கூரியர் பிரிவிற்கு வந்த பார்சல் ஒன்றை வருவாய் புலனாய்வு துறை ஆய்வு செய்தது. அதிலிருந்த மரத்தாலான அலங்கார பொருளை அதிகாரிகள் சோதனை செய்த போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் சிக்கி உள்ளது.

சிறிய சிறிய பொட்டலங்களாக மொத்தம் 56 பொட்டலங்களில் கொக்கைன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பார்சலை பெற்றுக் கொள்ள வந்த நபரை கைது செய்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்