CSG நடத்திய பரிசு போட்டி.. "2 டிக்கெட் MI FANக்கு, கிரவுண்ட்ல இருக்கு சம்பவம்"- 12 இலவச டிக்கெட், சொல்லி அடித்த 12 கில்லீஸ்..

x

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான 49வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டியில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

TNPL தொடரில் பட்டைய கிளப்பி வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் IPL தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது . அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான 49வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, போட்டி நடத்தப்பட்டது.

இதற்காக, ஏப்ரல் 30 முதல் மே 04 வரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில Taskகுகளும் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்கள் 25 IPL டிக்கெட்டுகளை தட்டிச் சென்றனர். மேலும், ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்