"தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி..?" - ஆளுங்கட்சியை எதிர்த்து ஒய்எஸ்ஆர் ஷர்மிளா பேரணி

x
  • தெலங்கானா அரசைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.
  • பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒய்எஸ்ஆர் ஷர்மிளா குற்றஞ்சாட்டி வருகிறார்.
  • இதனை வலியுறுத்தி, டெல்லியில் இன்று ஷர்மிளா தமது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
  • ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கானாவில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்றும் ஷர்மிளா வலியுறுத்தினார்.
  • டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து பேரணியாக சென்ற ஷர்மிளாவையும், அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.
  • கைதாகி வாகனத்தில் ஏறும் போது ஷர்மிளா, மற்றும் அவரது ஆதரவாளர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்