பாஜக நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - 3 சிறுவர்கள் கைது

x

திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 சிறுவர்களை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி. பாஜக நிர்வாகியான இவரின் வீட்டின் மீது நள்ளிரவில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இதில், வீட்டின் முன்புற பகுதியில் இருந்த மின்சாதன பெட்டி தீப்பிடித்து எறிந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து போலீசில் புகாரளித்துள்ளனர். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டிலிருந்த சிசிடிவி காட்சியை சோதனை செய்த போது, அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் சிக்கியுள்ளனர். விசாரணையில், பாஜக நிர்வாகியின் வீட்டில் கீழ் தளத்தில் வசித்து வரும் இளைஞருடன் சிறுவர்களுக்கு ஏற்பட்ட பணம் தகராறில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மூவரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்