பணமதிப்பிழப்புக்கு எதிரான மனுக்கள்.. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணை

x

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, புழக்கத்தில் இருந்த 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து, 57 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள், நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்