பொது மடத்துக்கு பூட்டு - பழனி மலை அடிவாரத்தில் திடீர் பரபரப்பு

x

பழனியில் பொது மடத்தை பூட்டி தன்னிச்சையாக செயல்பட்ட நிர்வாகிகள் மீது 100க்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி மலை அடிவாரத்தில் ஆயிரம் வைசியர் சமுதாயத்திற்கு சொந்தமான பொது மடத்தை நிர்வாகம் செய்வதற்காக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் இரு பிரிவாக பிரச்சினை எழுந்துள்ளது. இதில் ஒரு பிரிவினர் மடத்தை தன்னிச்சையாக பூட்டியது தொடர்பாக மடத்திற்கு முன் திரண்டு எதிர்ப்பை தெரிவித்த இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்