வீட்டு வெளியில் மசாஜ் சென்டர் உள்ளே பாலியல் தொழில் சென்னையில் பயங்கரம்

x

வீட்டு வெளியில் மசாஜ் சென்டர் உள்ளே பாலியல் தொழில் சென்னையில் பயங்கரம்

தாம்பரம் அடுத்த சேலையூர் அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது, பாலியல் தொழில் நடந்து வந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த இடைத்தரகர்களான வினோத், மூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம் பெண்கள் மூன்று பேரும் மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பான விசாரணையில், கடந்த 3 மாதங்களாக, வீட்டை வாடகைக்கு எடுத்து மஜாஜ் சென்டர் என்ற பெயரில், இணையதளத்தில் விளம்பரம் செய்து, பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்