ஒகேனக்கல் மீன் சந்தையில் திடீர் சோதனை... கிலோ கணக்கில் அழுகிய மீன்கள்.. அதிர்ச்சி அதிகாரிகள்

x

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்ததாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, இன்று தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர், மற்றும் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 30 - க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 5 கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனப்பகுதியில் குழி தோண்டி கொட்டி அழிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்