வராத அரசு பஸ்.. தவித்த மாணவர்கள்.. ஊராட்சி தலைவி கணவர் செய்த தரமான சம்பவம்

x

திருவண்ணாமலை மாவட்டம் அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுண்ணாம்புமேடு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயில்கின்றனர். தினந்தோறும் W4 என்ற அரசு பேருந்தில் மாணவர்கள் வந்து செல்லும் நிலையில், கடந்த ஒருவாரமாக பேருந்து இயக்கப்படாததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடித்து மாணவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். சரக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்த அவர், மாணவர்களை அவர்களது வீட்டிற்கு அதில் அழைத்துச்சென்றார். மேலும், இதுகுறித்து போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்