ஈரோடு இடைத்தேர்தல், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டமன்ற தேர்தல் - தேதி அறிவித்தது தேர்தல் ஆணையம்

ஈரோடு இடைத்தேர்தல், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டமன்ற தேர்தல் -  தேதி அறிவித்தது தேர்தல் ஆணையம்
x

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதி திரிபுரா சட்டமன்ற தேர்தலும் பிப்ரவரி 27ஆம் தேதியில் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதியும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ஆம் தேதியும் வாபஸ் பெறுவது பிப்ரவரி 10ஆம் தேதியும் நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.



Next Story

மேலும் செய்திகள்