"அரசு மருத்துவமனையால் சாவை விட ரண வேதனை அனுபவிக்கும் என் மகள்".. தமிழகத்தையே கலங்கவைக்கும் காவலர் போராட்டம்

x

சென்னை தலைமை செயலகம் முன்பாக 10 வயது மகளை தூக்கிக் கொண்டு காவலர் ஒருவர் நடத்திய பாசப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... அந்த பாச போராட்டத்தின் பின்னணியில் உள்ள தலைமை காவலரின் மன வேதனையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

3 வயது வரை நன்றாய் ஓடி, ஆடி திரிந்த ஆசை மகள்... மகளுக்கு நடனக்கலையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தையும், குழந்தையின் நடனத் திறமையும் கண்டு ரசித்த தந்தை.. ஆனால் அதே மகள் இப்போது ஒரு காலின் பாதத்தை இழந்து பரிதவிப்பதை எப்படி பொறுப்பார்?

கனவிலும் நினைத்திருக்க மாட்டார் 3 வயதுக்கு பிறகு குழந்தைக்கு ஏற்பட இருக்கும் விபரீதத்தை பற்றி..

முதலில் சிறுநீரக பிரச்சனை, அடுத்து கால் அரிப்பு, அதற்கடுத்து ரத்த பாதிப்பு, அதோடு இல்லாமல் மூளைக்காய்ச்சல், நரம்பு மண்டலம் பாதிப்பு மற்றும் இடது கை, கால் செயலிழப்பு என அடுத்தடுத்த துயரம் காவலரின் குடும்பத்தை சுழற்றியடித்தது...


Next Story

மேலும் செய்திகள்