மேகாலயா - திரிபுரா : பிரதமர் மோடி இன்று பயணம்

x

ஷில்லாங்கில், நடைபெறும் வட கிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இன்று காலை 10.30 மணியளவில், ஷில்லாங்கில், மாநில கன்வென்சன் மைய அரங்கத்தில் நடைபெறும் வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பின்னர், 11.30 மணியளவில் பொதுக்கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அங்கிருந்து அகர்தாலாவிற்கு செல்லும் பிரதமர் மோடி பிற்பகல் 2.45 மணிக்கு, பொதுக்கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

மொத்தமாக 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறுத் திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கவும் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்