எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டம் - முதல்வர் கடிதம்

x

டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்