"வெந்து தணிந்தது காடு..." கோவில் உள்ள ஒரு செல்ஃபி போடு...

x

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கோவிலினுள் செய்தி எடுக்க ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் நாயகி சித்தி இட்னானி, தடையை மீறி கோவிலினுள் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, நடிகை பதிவிட்ட புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பதிவிட்ட புகைப்படங்களில் இருந்து 2 புகைப்படங்களை நடிகை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ள நிலையில், பொதுமக்களை செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்காத காவல்துறை, நடிகைகளை மட்டும் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்