ஜன. 30 முதல் பிப். 20 வரை அசைவ உணவுக்கு தடை... - "மீறினால் கடும் நடவடிக்கை" - வெளியான அறிவிப்பு

x

பெங்களூர் அருகே 5 நாட்கள் நடைபெற உள்ள விமான கண்காட்சிக்காக, அசைவ உணவு, இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக. 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு அசைவ உணவு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன், கோழிக்கறி உள்ளிட்ட இறைச்சி விற்கும் கடைகளும், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை கண்டிப்பாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்காக விடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, விமாப்படை விதிப்படி நடவிடக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்