குடிபோதையில் TTR -யை தாக்கிய நபர்...கண்ணீர் விட்டு அழுது புலம்பிய TTR - திருச்சியில் பரபரப்பு

x

ராமேஸ்வரம் சேது அதிவிரைவு ரயிலில், குடிபோதையில் பயணி ஒருவர் தன்னை தாக்கியதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் கண்ணீர் மல்க அழுது பேட்டியளித்துள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் 'சேது' அதிவிரைவு ரயில் விருத்தாச்சலம் அருகே சென்று கொண்டிருந்த போது, பீகாரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் அரபிந்துக்கும், அந்த ரயிலில் பயணித்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணமூர்த்தி குடிபோதையில் இருந்ததாகவும் அவர் தமிழக தலைமை செயலக அதிகாரி என்றும் கூறப்படுகிறது.

மேலும் டிக்கெட் பரிசோதகரான அரபிந்த்தை கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரபிந்த் அளித்த புகாரின் பேரில் இருவரையும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள்

திருச்சி அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ரயில்வே பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்