2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் காதல்... வீட்டினுள் சேர்க்க மறுத்து துரத்திய உறவினர்கள் - சோகத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

x

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான இளைஞர் விஜய். இவர் தள்ளுவண்டியில் துணிகளை இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்த நிலையில், துணிகளை இஸ்திரி செய்ய வந்த ராமன்புதூர் பகுதியை சேர்ந்த 31 வயதான பெண்ணுடன் இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகளுக்கு தயான அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அப்பெண்ணை விஜய் திருமணம் செய்து கொண்டதால், குடும்பத்தினர் வீட்டினுள் சேர்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் நாகர்கோவில், பார்வதிபுரம் பகுதியில் விடுதியில் தங்கியிருந்த விஜய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவ குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்