புயல் வேகத்தில் மோதிய லாரி... கழன்று ஓடிய டயர்கள் - உருகுலைந்து போன முட்டை லாரி

x

சூலூர் அருகே நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ இடத்தில் ஒட்டுநர் உயிரிழந்தார். நாமக்கலில் இருந்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரளாவை நோக்கி லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சூலூர் அருகே பட்டணம்புதூர் பகுதியில் சென்ற போது, மற்றொரு லாரி ஒன்று முட்டை லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முட்டை லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்து, விபத்து குறித்தும் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்