தென்னை மரத்தை தாக்கிய மின்னல் - அதிர்ச்சியில் பெண்களுக்கு நேர்ந்த கதி

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பெய்த கனமழையின் போது, மின்னல் தாக்கி தென்னை மரம் தீ பிடித்த போது, அதிர்ச்சியில் 2 பெண்கள் மயக்கம் அடைந்தனர். வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, ராமநாதபுரத்தில் உள்ள நாராயணசாமி என்பவரின் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் திடீரென மின்னல் தாக்கி தீ பற்றியது. இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த இரண்டு பெண்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்