தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு தகவல்

"தமிழக மீனவர்கள் துப்பாக்கிச் சூடு குறித்து உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" "விசாரணை அறிக்கை வந்த பிறகு விவரம் தெரிய வரும்" - எல்.முருகன்
x

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது, இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் காயமடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்றனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.

இதில், காயமடைந்த வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் உரிய விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்