மந்தி பிரியாணி சாப்பிட்ட நபர் திடீர் மரணம் - மேலும் 69 பேருக்கு நேர்ந்த கதி

x

கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கொச்சி பரவூரை சேர்ந்த ஜார்ஜ், கடந்த 17 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள உணவகத்தில் மந்தி பிரியாணி சாப்பிட்டதில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜார்ஜ், திடீரென உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 16 ஆம் தேதி இதே உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 69 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி உணவகத்திற்கு சீல் வைத்ததோடு உணவக உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்