ரயில்வேதுறையால் அகற்றப்பட்ட கர்னாக் பாலம்

x

மும்பையில் இருந்த பிரிட்டிஷ் காலத்து பாலம், ரயில்வேதுறையால் அகற்றப்பட்டது.

புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே கர்னாக் பாலம் இருந்தது.

பாலத்தை அகற்ற ரயில்வே திட்டம் திட்டியது. நவம்பர் 19ஆம் தேதி இரவு 11 மணிக்குத் தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு இடிக்கும் பணி நிறைவடைந்தது.

பாலத்தை அகற்றுவதற்கு ரயில்வேதுறை 500 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், பாலம் 44 துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலம் அகற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை, மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பகிர்ந்துள்ளார்.

பழைய பாலத்தின் சுமார் 450 டன் இரும்பை எடுத்துச் செல்ல நான்கு கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ரயிலேவே துறை, 19 மாதங்களுக்குள் கார்னாக் பாலத்திற்குப் பதிலாக ஒரு பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

70 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட புதிய பாலம் 49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்