ஜெய் பீம் படக்குழுவினர் மீது காப்புரிமை சட்டத்தின் படி வழக்குப்பதிவு | Jai Bhim

x

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்ட நிலையில், ராஜாக்கண்ணுவின் உறவினரும், பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் அனுமதி இல்லாமல் தங்கள் வாழ்க்கையை திரைப்படமாக்கியதாக வும், காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொளஞ்சியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வரும் 26-ஆம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்