"கட்டணமில்லா பயணத் திட்டம்"அமைச்சர் சிவசங்கர் சொன்ன தகவல்..

x

2015 ஆம் ஆண்டு பொது சொத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் கட்டமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளை கடந்து இயங்கி வரும் ஆயிரத்து 500 பேருந்துகள், புதிய பேருந்துகள் வாங்கும் வரை பயன்பாட்டில் இருக்குமெனவும், 4 ஆயிரம் பேருந்துகளை வாங்க ஒரு மாத காலத்தில் டெண்டர் விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டம் பிரச்சனைகளின்றி செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்