இந்தியாவின் 2வது ஆப்பிள் ஸ்டோர்... தொடங்கி வைத்தார் ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக்

x

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் ஐபோன் நிறுவனம் இந்தியாவில் தனது முதலாவது சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், டெல்லி சாக்கேட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில், 2வது விற்பனை அங்காடியை, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு, ஐபோன் ரசிகர்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். வாடிக்கையாளர்கள் சிலருடன் உரையாடிய டிம் குக், புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்