ஆஸ்கர் விருதை கையில் ஏந்தும் முன்பே ரத்த வாந்தி எடுத்து இந்திய குழந்தை நட்சத்திரம் மரணம்

x

ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட "செல்லோ ஷோ" திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி புற்று நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் நடித்த 6 குழந்தை நட்சத்திரங்களில் ராகுலும் ஒருவர்.

15 வயதான ராகுல் நடித்த குஜராத்தி திரைப்படமான செல்லோ ஷோ, இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ராகுல் இறப்பதற்கு முன்னால் பலமுறை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது தந்தை கவலையுடன் தெரிவித்தார்.

வரும் 14ம் தேதி செல்லோ ஷோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ராகுலின் இறுதிச் சடங்குகளை நிறைவு செய்த பிறகு அவரது கடைசி படத்தை குடும்பத்துடன் சேர்ந்து கண்டிப்பாக பார்க்க உள்ளதாக ராகுலின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்