உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வார்டில் ஆண்களை நின்ற சம்பவம் - தேர்தல் அலுவலர்கள் டிஸ்மிஸ்

x

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இரண்டு பேரை மாவட்ட ஆட்சியர் அரசு பணியிலிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபரில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சியில்

கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயசீலன் ஆகிய இரண்டு ஆண்கள் வெற்றி பெற்றனர். பின்னர், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில், ஆண்கள் வெற்றி பெற்றது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலருமான வெங்கடாஜலம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் பணியாற்றிய சிவக்குமார் ஆகிய இரண்டு பேரையும், அரசு பணியில் இருந்து நிரந்தர பணி நீக்கம் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்