"குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கைதாவேன்" - பிரிஜ் பூஷண் பரபரப்பு கருத்து

x

தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கைதாவேன் என பாஜக எம்பியும் மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறி உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை டெல்லி போலீசார் விசாரித்து வருவதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தான் கைது செய்யப்படுவேன் என்றும் கூறினார்.

பதக்கங்களை கங்கையில் வீசச் சென்றவர்கள் விவசாய சங்கத் தலைவரிடம் அவற்றை அளித்துள்ளனர் என்றும், இதுதான் அவர்களின் நிலைப்பாடு என்றும் பிரிஜ் பூஷண் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்