யாரென்றே தெரியாத 3 சிறுவர்களை காப்பாற்றி.. தன் உயிரை விட்ட கணவன்.. கல்யாண நாளில் சோகம்..கதறும் மனைவி

x

மதுரை அருகே திருமண நாளில் மனைவியை பார்க்க சென்று கொண்டிருந்த இளைஞர், கண்மாயில் தத்தளித்த சிறுவர்களை காப்பாற்ற இறங்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் அருகே வசித்து வந்தவர் முத்துக்குமார். தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்று வந்த இவருக்கு, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பள்ளி விடுமுறைக்காக முத்துக்குமாரின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் உள்ள அவருடைய பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று தனது திருமண நாள் என்பதால் மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்க விரும்பிய முத்துக்குமார், இரு சக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். அப்போது, மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள கருப்பாயூரணி கண்மாயில் 3 சிறுவர்கள் தத்தளித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துக்குமார், அவர்களை காப்பாற்ற கண்மாயினுள் குதித்துள்ளார். இதில், மூன்று சிறுவர்களையும் பத்திரமாக மீட்ட அவர், எதிர்பாரதவிதமாக கண்மாய் சேற்றில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதில், தனது கணவருக்கு நீச்சலே தெரியாது என முத்துக்குமாரின் மனைவி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்