டீ போடும்போது வெடித்த சிலிண்டர்.. சுக்குநூறாக நொறுங்கி தரைமட்டமான வீடு - நடுங்கவைக்கும் காட்சிகள்

x

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் நகரில் வீட்டு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். ஏக்தா காலனியைச் சேர்ந்த விஷால் என்பவரது மனைவி டீ போட சமையலறை சென்றுள்ளார்... அப்போது எதிர்பாராத விதமாக் சிலிண்டர் வெடித்த நிலையில், இந்த விபத்தில் விஷால், அவரது மனைவி, மற்றும் 2 மகன்கள் பலத்த காயம் அடைந்தனர். அவரது வீடு முழுவதுமாக வெடித்துச் சிதறியது. அருகில் உள்ள வீடுகளும் பலத்த சேதம் அடைந்த நிலையில், அங்கிருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்