சென்னை T.நகரில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து.. எதிரே இருந்த வாகனங்கள் மீது மோதி விபத்து

x

சென்னை தியாகராயநகரில் இருந்து சென்ற அரசுப் பேருந்து, கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. எதிர்பாராத விதமாக சாலையில் நின்றிருந்த லாரி மற்றும் கார் மீது பேருந்து மோதியது. பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்