தீபாவளி பண்டிகையால் பூக்களின் விலை உயர்வு - மல்லிகைப்பூ கிலோ ரூ.1,600 க்கு விற்பனை

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களை கட்டியது.

நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ 900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், இன்று அதன் விலை உயர்ந்து ஒரு கிலோ ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால், பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்