"Ex. டிஜிபி- எனக்கே இந்த நிலை..!" - "அரசாங்கம் உடனே .."முன்னாள் IPS ரவி பரபரப்பு பேட்டி

x

சமூகவலைதளங்களால் தனி மனித சுதந்திரம் மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மத்திய மாநில அரசுகள் இணைந்து சமூகவலைதளங்களை முறைப்படுத்த வேண்டும் என முன்னாள் டிஜிபி ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற டிஜிபி ரவி பெயரில் முகநூல் கணக்கை தொடங்கிய சைபர் கிரைம் குற்றவாளிகள், அவரது நட்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பு மோசடியில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த அவர், சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்ததோடு, பேஸ்புக் நிறுவனத்திற்கும் ஈ-மெயில் மூலம் புகார் அளித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களில் பணம் தொடர்பான தகவல் வந்தால் நம்பவேண்டாம் என்றும், மத்திய மாநில அரசுகள் இணைந்து சமூகவலைதளங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்