தாயுடனே இறந்து கிடந்த குட்டி யானை.. பாறை விழுந்து பலியான மற்றொரு யானை - நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள்

x
  • தென் பர்கூர் காப்புக்காட்டு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்ட போது பெண் யானை, குட்டி யானையுடன் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்தனர்.
  • இதையடுத்து அந்தியூர் வனச்சரங்க அலுவலர் உத்திரசாமிக்கு தகவல் அளிக்கப்பட்டது.
  • பின்னர், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை கால்நடை மருத்துவர், அந்தியூர் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திக் உள்ளிட்டோர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
  • இதில் இறந்த யானை குட்டி யானையுடன் மணியாச்சிபள்ளம் நீர் ஓடையில் வரும் போது பள்ளத்தாக்கில் கால் இடறி தவறி விழுந்திருக்ககூடும் என தெரிய வந்துள்ளது.
  • பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
  • தொடர்ந்து வன பகுதியை சார்ந்த பகுதியில் யானை இறப்பு சம்பவம் அதிகரித்து வருவது வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்