"வேல வெட்டி இல்லாமலா இங்க வர்றோம்" - திமுக மேயரை கடுமையாக விமர்சித்த திமுக பெண் கவுன்சிலர்

x

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மேயர் மீது திமுக கவுன்சிலர்களே புகார்களை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகராட்சி கூட்டம், மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

அதில், திமுக கவுன்சிலர் சுதா பேசும்போது, கடந்த 9 மாதங்களில் எவ்வித பணிகளும் மாநகராட்சியில் நடைபெறவில்லை என்றும், மாமன்ற கூட்டத்தில் தன்னை பேசக்கூட அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதுபோன்று ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மேயர் மீது தெரிவித்தனர்.

இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் இரு தரப்பாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்