"யோ.. எங்கய்யா இங்க இருந்த பஸ் ஸ்டாப்".. காணாமல் போன பேருந்து நிறுத்தம் - திடீர்னு முளைத்த மெஸ்

x

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றிய சம்பவம், சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே அமைந்துள்ள வரதமா நதி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். அணைக்கு எதிரே பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தை மறைத்து, தோட்டக்கலைத்துறை சார்பில் உள்ள தள்ளுவண்டியை கொண்டு, உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தை அகற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்