காதலுக்கு எதிர்ப்பு - மாணவியை கடத்திய உறவினர்

x
  • தர்மபுரி மாவட்டத்தில் மாணவியை கடத்தி சென்ற உறவினரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்ட அள்ளி பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை.
  • 32 வயதான இவர், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள மாணவியான உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இதை மாணவியின் தரப்பினர் கண்டித்த நிலையில், மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்தனர்.
  • இந்நிலையில், தம்பிதுரை மாணவியை கடத்தி சென்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.
  • இதன் பேரில் இருவரையும் தேடி வந்த போலீசார், தம்பிதுரையை போக்சோவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்