கார்த்திகை தீபம் - முதல் நாள்.. பஞ்ச மூர்த்திகளின் வீதி உலா - திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

x

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா உற்சாகமாக நடைபெற்றது. முதல் நாள் இரவான நேற்று, அண்ணாமலையார், விநாயகர், சந்திரசேகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர், மாட வீதிகளில் உலா சென்றனர். அப்போது, ஏராளமான பக்தர்கள் கூடி நின்று, தரிசனம் செய்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்