போட்டியை வென்ற 'டெல்லி' வார்னர்.. இதயங்களை வென்ற 'பஞ்சாப்' லிவிங்ஸ்டன் - நொறுங்க வைத்த IPL த்ரில்லர்..!

x

ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், பஞ்சாப் அணி போராடி தோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்த டெல்லி வீரர் ரோசோவ் 37 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். பிரித்வி ஷா 58 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், தவான் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அரைசதம் அடித்த அதர்வா தைடே ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

பின்னர் ஒரு முனையில் லிவிங்ஸ்டோன் போராட, மறுமுனையில் பஞ்சாப் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் ரன் எடுக்கப்படவில்லை

இதனால் டெல்லி அணியின் வெற்றி உறுதி என கருதப்பட்ட நிலையில், சிக்ஸருக்கு பறந்த ஓவரின் 4வது பந்து நோபாலாக அமைந்தது. இதனையடுத்து 3 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது

இருப்பினும் அடுத்த 3 பந்துகளை வீசிய இஷாந்த் சர்மா, ரன் எதுவும் தரமால் லிவிங்ஸ்டோனின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டெல்லி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இறுதி வரை போராடிய லிவிங்ஸ்டோன் 94 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்