உச்சநீதிமன்றம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - டெல்லியில் பரபரப்பு...பதற்றம்

x

டெல்லியின் ஐடிஓ சாலையில் கார் ஒன்று திடீரென தீ பிடித்துள்ளது , சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள, சுப்ரீம் கோர்ட் அருகே,, கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பீதியை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு வந்த டெல்லி போலீஸ் அதிகாரிகளும், இந்த சாலையில் டெல்லி போலீஸ் தலைமையகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களும் நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சிறிது நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டதை அடுத்து ஐடிஓ சாலையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை தொடங்கினர். ,

ஐடிஓ சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென எப்படி தீ பந்தாக மாறியது என்பது இதுவரை தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்