விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

x

சென்னையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் சந்தேக முறையில் மரணமடைந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மங்களபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதான ஆகாஷ் என்பவர், கடந்த 20ஆம் தேதி ரயில்வே ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில், ஓட்டேரி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால், போலீசார் குடும்பத்தாரை அழைத்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு வீட்டிற்கு சென்ற ஆகாஷ் சுய நினைவின்றி இல்லாததால், கீழ்ப்பாக்கம்

அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தார் கூறிய நிலையில், இது குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்