முதன் முதலாக காதலனை காண பறந்த காதலி.. காத்திருந்து கொடூரத்தை நிகழ்த்திய காதலன் - ட்விட்டரை பார்த்ததும் உறவினர்களுக்கு ஷாக்

x

மெக்சிகோவை சேர்ந்த 51 வயதான ப்ளான்சா அரேலானா, பெருவை சேர்ந்த 37 வயதான ஜான் பாப்லோவை ஆன்லை ன் டேட்டிங் செயலியில் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.

ஜானின் ஆசைவார்த்தைகளில் தன்னை மறந்தவர், வீடியோ காலில் மணி கணக்கில் செலவிட்டுள்ளார். ஜான் கொடுத்த நம்பிக்கையால் பூரித்துபோன ப்ளான்சா, பெருவுக்கு பிளேட்டில் பறக்க முடிவு செய்துள்ளார்.

காதலை சந்திக்க போவதாக ஆசையுடன் வீட்டில் தகவலை சொல்லிவிட்டு 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து Huacho சென்றுள்ளார். அங்கு சென்ற மகிழ்ச்சியாக இருப்பதாக ப்ளான்சா வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரிடம் இருந்து இருந்து எந்த தகவலும் அவரது உறவினர்களுக்கு கிடைக்காததால், என்ன நேர்ந்ததோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அதுவேளையில் ப்ளான்சா ட்விட்டரில் உதவி கோரியது அவர்களை தூக்கி வாறிப்போட்டுள்ளது.

இதனையடுத்து ப்ளான்சாவை மீட்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியெல்லாம் வீணானது. ஆற்றில் சடலமாக மிதந்த ப்ளான்சாவின் மரணம் குறித்து விசாரித்த போது, அவர் ஆசை ஆசையாக சந்திக்க சென்ற காதலர் ஜானே இந்த கொடூரத் தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

ப்ளான்சாவை கொன்று அவரது உடல் உறுப்புகளை விற்ற மருத்துவ மாணவர் ஜானை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்