சாதிப் பாகுபாடு காட்டி பக்கத்து வீட்டு பெண்ணை கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர்.. வாசலில் முட்செடிகள் போட்டு அட்டூழியம் - பரபரப்பு காட்சி

x
  • கடலூர் மாவட்டத்தில், சாதிப் பாகுபாடு காட்டி, வேறு சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தாக்கியதால் முனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட கவியரசன்- தமிழ்ச்செல்வி தம்பதியர், கவியரசனின் வீட்டில் வசித்து வந்தனர். கவியரசன் வெளிநாட்டுக்குச் சென்று விட்ட நிலையில், அவருடைய குடும்பத்தினர் தமிழ்ச்செல்வியை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.
  • ஆனால், தமிழ்செல்வி பட்டியலினத்தவர் என்பதால், பக்கத்து வீட்டினர், சாதிப்பாகுபாடு காட்டி மிரட்டி வந்ததாக தெரிகிறது
  • . இந்நிலையில், தமிழ்ச்செல்வியின் வீட்டுக்கு வெளியே முள் மரங்களை வெட்டி போட்ட பக்கத்து வீட்டினர், அதைத் தட்டிக்கேட்ட தமிழ்ச்செல்வியை தாக்கி உள்ளனர்.
  • இதனை வீடியோ ஆதாரத்துடன் காண்பித்த பிறகும், திட்டக்குடி போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார்.
  • அங்கு பணியில் இருந்த காவலர்கள், அவர்களை தடுத்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்