ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம் - முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறியதால் பரபரப்பு

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் புறப்பட்டு சென்றதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறியதால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

அதே போல், ரயில் டிக்கெட் முன் பதிவு மையத்தில், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய காலை முதலே வடமாநில தொழிலாளர்கள் குவிந்தனர்.

இதனையடுத்து, அங்கு ஏராளமான ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்