ஆப்பிரிக்க-அமெரிக்கரை அடித்துக் கொலை செய்த காவலர்கள்.. 5 போலீசார் மீது குற்றச்சாட்டு

x

29 வயதான டியர் நிக்கோல்ஸ் என்பவர் கடந்த 7ம் தேதி போக்குவரத்து விதியை மீறியதாகக் கூறி டென்னிஸி மாகாணத்தில் உள்ள மெம்ஃபிஸ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு மிருகத்தனமாக தாக்கியதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன், டெமெட்ரியஸ் ஹேலி, எம்மிட் மார்ட்டின், மற்றும் டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர் ஆகிய 5 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஆவர். படுகாயம் அடைந்த நிகோல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்