காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு..."யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்" - ஆர்.எஸ்.பாரதி ட்வீட்

x

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு..."யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்" - ஆர்.எஸ்.பாரதி ட்வீட்

தனது பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டர் பதிவிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி. பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் பேசியதை "வெட்டியும், ஒட்டியும்" பாஜக சார்ந்த சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளன. என்னுடைய முழு பேச்சை கேட்டால் உண்மை புரியும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தெளிவாக பேட்டியளித்துள்ளேன் என தெரிவித்துள்ள அவர், இருப்பினும் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்