தாய் இறந்து 10 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கில், அந்த குடும்பத்துக்கு, 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது...

இது தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தாக்கல் செய்த மனுவில், தனது தாயார் கடந்த 2013ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், அதற்கு இழப்பீடாக 7 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, அப்போதைய காலகட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் 10 வருடங்கள் கடந்தும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்றும் கூறினார். எனவே, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எட்டு வாரங்களுக்குள் வழங்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்....


Next Story

மேலும் செய்திகள்