சீன எல்லையில் அழகியின் கால்கள்.. சமையல் பாத்திரத்தில் மண்டை ஓடு - உலகை உறைய வைத்த கோர சம்பவம்

x
  • டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக நறுக்கி பிரிட்ஜில் வைத்த காதலன்... அசாமில் கணவர், மாமியாரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த இளம்பெண்... என்று சமீபகாலமாகவே வரிசையாய் பல கொலை சம்பவங்களை கடந்து வருகிறோம்... பிரிட்ஜ் என்ன நவீன கல்லறையா என்ற கேள்வியைக் கேட்க வைத்து விட்டது அதேபோன்ற மற்றுமொரு சம்பவம்...
  • "வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறேன்"... ஹாங்காங் பிரபல மாடல் அபி சோய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள நம்பிக்கை மிகு வார்த்தைகள் இவை... பேரழகி அபி சோய்க்கு வயது 28... முத்து முத்தாய் 2 குழந்தைகள்...கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட L'Officiel Monaco இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தை அலங்கரித்திருந்தார் அபி சோய்... ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவரைக் காணவில்லை... என்ன ஆனது அபிக்கு?... காவல்துறை விசாரணையை விரைவு படுத்தியது...
  • கிடைத்தார் அபி சோய்... ஆனால் எப்படி தெரியுமா?... உடல் துண்டு துண்டாக...
  • சீன எல்லைக்கு அருகாமையில் தை போ பகுதியில் உள்ள வீட்டில், கால்கள் மட்டும் பிரிட்ஜுக்குள் கண்டுபிடிக்கப்படவே, காணாமல் போன தலையையும், உடலையும், கைகளையும் போலீசார் தேடினர்...
  • அப்போது சமையல் பாத்திரத்திற்குள் அபியின் மண்டை ஓடும், பக்கத்தில் விலா எலும்பு, முடி, உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன...
  • கூடவே சிக்கியது கறி வெட்டும் கத்தியும், உடலை கூறு போட உதவிய எலக்ட்ரிக் ரம்பமும்...
  • மேலும் மண்டை ஓட்டின் வலது பக்கத்தில் ஒரு துளை இருந்ததாக கூறப்படுகிறது...
  • இந்தப் படு பாதக செயலை செய்தது யார் என்ற விசாரணையில், வேறோரு தீவுக்கு தப்ப முயன்ற அபியின் முன்னாள் கணவர் Alex Kwong, மாமனார், சகோதரர், மாமியார் ஆகியோர் சிக்கியுள்ளனர்... அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆடம்பர பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன...
  • சொத்து தகராறு காரணமாக இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...
  • இச்சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில், தாயை இழந்து தவிக்கும் அபி சோயின் 2 குழந்தைகளின் நிலை தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்